இந்திய முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு சட்ட நடவடிக்கை: சிறி வலிசுந்தர வலியுறுத்தல்- செய்திகளின் தொகுப்பு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் வலிசுந்தர கருத்து தெரிவிக்கையில்,
"இந்தியாவில் உள்ள மூன்று அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் பின் இலங்கைக்கு இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக இலங்கையில் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னரே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் செய்யப்படும்.
மேலும் இந்திய முட்டைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய மாலைநேர பிரதான செய்திகள்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



