தவுலகல கடத்தல் விவகாரம்: மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞனுக்கு பாராட்டு
கண்டி - தவுலகலவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை இலங்கை பொலிஸ் திணைக்களம் பாராட்டியுள்ளது.
துணிச்சலுடன் செயல்பட்ட 25 வயது முகமது இசதீன் அர்ஷத் அகமது என்ற நபருக்கே இவ்வாறு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
கண்டி - கம்பளை, தவுலகல பிரதேசத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி இன்று திங்கட்கிழமை (13) அம்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் நடவடிக்கை
இன்று காலை அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து கண்டிக்கு செல்வதற்காக காத்திருந்தபோதே மாணவியும் சந்தேக நபரும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று (12) இரவு அம்பாறை பகுதியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட மாணவியையும் சந்தேக நபரையும் கண்டுபிடிக்க 05 பொலிஸ் குழுக்களை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இக்குழுக்களின் தேடுதல் நடவடிக்கையின்போதே இன்று காலை மாணவியையும் சந்தேக நபரையும் கண்டுபிடித்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
