மன்னாரில் எரிபொருள் வழங்குவதில் குளறுபடி - தாழ்வுபாடு கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு
மன்னார் - தாழ்வுபாடு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானிய எரிபொருள் வழங்கும் நடவடிக்கையில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக தாழ்வுபாடு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழப்ப நிலையானது நேற்றைய தினம் (09.06.2023) இடம்பெற்றுள்ளது.
மன்னார் நகர் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கை
மேலும் அதில் நீல நிற அட்டைகளுக்கு மாத்திரம் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்காலிக புத்தகமான வெள்ளை நிற புத்தகத்திற்கு மானிய எண்ணெய் வழங்கப்படவில்லை.
இருப்பினும் இவ்விரு புத்தகங்களும் கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.
இதன்போது வெள்ளை நிற புத்தகம் வைத்திருக்கும் 100க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான மானிய எரிபொருள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய பதிவுகளை கொண்டுள்ள ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும் மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென மன்னார் -கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
