குரங்கு அம்மை நோய் பாதிப்பை முதன் முறையாக உறுதி செய்தது கனடா
கனடாவின் கியூபெக்கில் குரங்கு அம்மை தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை முதன் முறையாக உறுதி செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றானது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 20 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தொடர்பில் கவனம் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறை, பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருப்பவர்களுக்கே பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே, 17 பேர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பில் விசாரித்து வருவதாக, மாண்ட்ரீல் பொது சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
