மொனராகலை மாவட்டத்தில் 250 ஏக்கர் காணிகளை தம்வசமாக்க தொழிலதிபர்கள் திட்டம்

Monaragala Crime
By Aanadhi Jun 08, 2026 05:09 PM GMT
Report

மொனராகலை மாவட்டத்தின் முக்கிய யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள 250 ஏக்கர் காணிகளை தொழிலதிபர்கள் தம்வசமாக்கிக் கொள்ளும் திட்டமொன்றுக்கு ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

அனுராதபுர மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் கூடிய 5 வனாந்தரங்களையும், 3 யானை வழித்தடங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்கான திட்டங்களைச் சுற்றுச்சூழல் அமைச்சு தயாரித்துள்ளது.

இதற்கிடையில், தெமளிய-வந்தம-குடாஓய யானைகளின் வாழ்விடத்தையும் வழித்தடத்தையும் அழிப்பதற்கான ஒரு திட்டத்தை மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சததுரி கங்கானியும், வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் வலிமுனிகே நிஹாலும் தயாரித்துள்ளனர்.

சதுரி கங்கானி மற்றும் வலிமுனிகே நிஹால் ஆகியோரின் அழுத்தம் மற்றும் செல்வாக்கின் பேரில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வெல்லவாய யானைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரியான நிஷாந்த பிரேமலால் இத்திட்டத்தைத் தயாரித்துள்ளார்.

எம்பிக்கள் உடந்தையா.. 

இத்திட்டத்தின் மூலம், மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மகாகடவர ஏரியைச் சுற்றியுள்ள 250 ஏக்கர் காடுகளைப் பல தொழிலதிபர்களுக்குப் பகிர்ந்தளிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் வெல்லவாய பிரதேச சபைத் தலைவரும் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மொனராகலை மாவட்டத்தில் 250 ஏக்கர் காணிகளை தம்வசமாக்க தொழிலதிபர்கள் திட்டம் | Industrialists Lease 250 Acres Land Monaragala

மகாகடவர ஏரிக்கரையோரமாக உள்ள வன நிலங்களைக் கைப்பற்றுவதற்கான ஒரு திட்டம், பல அரசாங்க வனாந்தர ஆக்கிரமிப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மொனராகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான ஜகத் புஷ்பகுமாராவால், தயாரிக்கப்பட்டது.

இருப்பினும், மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துவதாகவும், மக்களுடன் ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாகவும், முந்தைய அரசாங்கங்களைப் போல சட்டவிரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் மக்களுக்கு வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம், இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுப்பது குறித்து பிரதேசவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தெமளிய-வந்தம-குடாஓய யானைகள் சரணாலயம் மற்றும் யானைகள் வழித்தடத்தின் சிறப்பு என்னவென்றால், இது லுனுகம்வெஹர தேசியப் பூங்காவிலிருந்து ஹந்தபானாகலவௌ இற்கு யானைகள் இடம்பெயரும் ஒரு பாரம்பரிய யானைகள் வழித்தடமாகவும், யானைகளின் நிரந்தர வாழ்விடமாகவும் இருக்கிற்து.

120 யானைகள் 

2694 ஹெக்டயார் பரப்பளவில் அமைந்துள்ள தெமளிய-வந்தம-குடாஓய பாதுகாக்கப்பட்டுள்ள வனம் மற்றும் அதை ஒட்டியுள்ள கடவரவெவ, பரலுவெவ, தெமளியவெவ, ஹுரத்கமுவவெவ மற்றும் குணேரிஸ்வெவ உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 120 யானைகள் வசித்து வருகின்றன.

மொனராகலை மாவட்டத்தில் 250 ஏக்கர் காணிகளை தம்வசமாக்க தொழிலதிபர்கள் திட்டம் | Industrialists Lease 250 Acres Land Monaragala

மேலும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுமார் 350 யானைகள் இந்த வனப்பகுதி வழியாக இடம்பெயர்கின்றன. இந்த யானைகளின் இடம்பெயர்வுப் பாதை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, இப்பகுதியைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட யானைகள் ஒரு சிறிய வனப்பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், மகாகடவர ஏரிப் பகுதியிலிருந்து யானைகள் வழித்தடத்தைக் கடந்து, குடாஓயாவிலிருந்து தெமோதர மற்றும் ஹந்தபானகல வரை ஒரு புதிய யானை இடம்பெயர்வுப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, மகாகடவர ஏரிக்குக் கீழே யானைப் பாதையிலிருந்து அகற்றப்படவுள்ள சுமார் 250 ஏக்கர் முழு வனப்பகுதியும் வணிகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாரம்பரிய யானைகள் வழித்தடம் மற்றும்பரலுவெவ, தெமளியவெவ மற்றும் மகாகடவரவெவ ஆகிய குளங்கள் யானைகளால் இழக்கப்படும்.

அத்துடன் இந்த அழிவுகரமான திட்டத்தின் காரணமாக, புத்தள பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 12 கிராமங்களும், வெல்லவாய மற்றும் தனமல்வில பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 7 கிராமங்களும் கடுமையான யானை-மனித மோதலுக்கு உள்ளாகும்.

ஆளுங்கட்சி அரசியல்வாதிகளி இந்த நில அபகரிப்புத் திட்டத்தின் காரணமாக, 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் நிம்மதயான வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US