புதையலில் இருந்து பெறப்பட்ட தங்கப் பந்துகள்? விற்பனையின் போது சிக்கிய நபர்கள்
புதையலில் இருந்து பெற்ற 50 கிராம் தங்க பந்துகள் என கூறி ஹோமாகம பிரதேச மக்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தங்க பந்துகளை இரண்டு லட்சம் ரூபாவுக்கு விற்றை செய்த நபர்கள் தங்க பந்துகளுடன் அனுராதபுரம் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலலுகமைய அனுராதபுரம் விஸயபுர கல்பொத்த வீதி பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் விஜயபுர பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். ஹோமாகமயில் இருந்து மோட்டார் வாகனத்தில் வந்த நால்வர் இதனை பெற்றுக் கொண்டு பணம் வழங்க முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் தங்க பந்துகளை சோதனையிடும் போது அதில் 86 பந்துகள் காணப்பட்டுள்ளன.
அது போலியான தங்க பந்துகளா என இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
அதன் தொல்பொருள் பெறுமதியை பெற பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam