உணவு ஒவ்வாமையினால் பாடசாலை மாணவர்கள் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நானுஓயா - கிளாசோ பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையால் இன்றையதினம்(28.04.2023) வழங்கப்பட்டுள்ள பகல் உணவின் காரணமாகவே குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமையினால் மயக்கம், வயிற்றுவலி மற்றும் குமட்டல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட 31 மாணவர்களும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு எந்த மாணவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி- திருமாள்
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri