இலங்கையில் இரண்டாவது வெற்றியை நோக்கி இந்தியா!! அடுத்த ராஜதந்திரம்...
இலங்கையில் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் ஆரம்ப வெற்றியை நோக்கி நகர்கிறது.
இதன் கட்டங்களாகவே
1-வடக்கில் நிர்மாணிக்கவிருந்த சூரியக்கதிர் மின்னுற்பத்தி மையங்களை சீனா கைவிட்டமை,
2- சீனாவின் சேதனப்பசளையை இலங்கை நிராகாித்தமை,
3-இந்தியாவில் இருந்து உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படும் ஆயத்தங்கள்,
4-இந்தியா, இலங்கையை கைவிடாது. எனவே உணவு மற்றும் மருந்துகளை இந்தியாவிடம் கேளுங்கள் என்று இலங்கையின் எதிர்கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை,
5-இலங்கையின் தமிழ் கட்சிகள் துணிந்து நின்று இந்தியாவின் உள்ளீடுகள் இருக்கும் மாகாணசபைக்கு உயிரோட்டம் கொடுக்க முன்வந்துள்ளமை என்பவற்றை பார்க்கமுடிகிறது.
6 -ஏற்கனவே 1987ஆம் ஆண்டில் (4 ஜூன் 1987) இந்தியாவின் ”உணவு ராஜதந்திரமே” ( விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுகளை போட்டமை) இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் .இந்தியாவின் தலையீட்டை உறுதிச்செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எனவே உணவின் மூலம் இலங்கையில் இந்தியா, இரண்டாவது வெற்றியை பதிவுசெய்யப்போகிறது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின்போது இலங்கையில் சீனா ஆழமாக வேரூன்றியது என்றே கூறவேண்டும்.
அந்தளவு இலங்கையின் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வந்தது.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு கூட சீனாவின் நிறுவனம் நிதியுதவி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அண்டை நாடான இந்தியாவினால் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின்கீழ் இலங்கைக்குள் காலடி வைக்கமுடியவில்லை.
எனினும் இறுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்து சென்ற பின்னரே இந்தியாவின் ராஜதந்திர நகர்வு இலங்கையில் விரிவுப்படுத்தப்பட்டது.
இதன் பிரதிபலனே இன்று இந்தியா, இலங்கையில் ராஜதந்திர வெற்றியை பெற ஆரம்பித்துள்ளது.
இதற்காக இந்தியாவுக்கு இலங்கை வழங்கவேண்டிய கைமாறல்களை எதிர்காலத்திலேயே பார்க்கமுடியும். திருகோணமலையின் எரிபொருள் குதங்கள் தொடர்பில் இலங்கையுடனான உடன்படிக்கையை இந்தியா நீடிக்கப்போகிறது என்ற தகவலை ஏற்கனவே ஜேவிபி வெளியிட்டிருந்தமை கூட இலங்கை இந்தியாவுக்கு வழங்கப்போகும் கைமாறல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.
இதேவேளை இந்தியா, இலங்கையுடனான ராஜதந்திர நகர்வில் இந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது சீனா மீண்டும் இந்தியாவின் இடத்தை பிடிக்க முயற்சிக்குமா? என்பதை கள நிலவரங்களே தீர்மானிக்கப்போகின்றன.
எனவே எது நடந்தாவுலும் இங்கு பாதிக்கப்படபோவது இலங்கை மக்களின் இறைமை மாத்திரமே!