கொழும்பிலிருந்து நாடு திரும்பிய இந்திய போர்க்கப்பல்கள்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மேற்கொண்டிருந்த நல்லெண்ண விஜயத்தை நிறைவு செய்த நிலையில் இரண்டு இந்திய போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து நாடு திரும்பியுள்ளன.
சமர்த் மற்றும் அபினவ் எனப்படும் குறி்த்த இந்திய போர்க்கப்பல்களும் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதியன்று கொழும்பில் நங்கூரமிடப்பட்டன.
இந்திய போர்க்கப்பல்கள்
இதன் பின்னர், அவை காலி துறைமுகத்துக்கு சென்றுள்ளன.
குறித்த இந்த இரண்டு கப்பல்களும் இலங்கையின் கப்பல்களுடன் பயிற்சிகள் உட்பட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
மேலும், முன்னதாக இலங்கை மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கடற்பயிற்சிகளுக்காக மாலைத்தீவுக்கு சென்றிருந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |