வடக்கு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைமடி படகுகள்..!
அண்மைய புயல் காற்றிற்கு பின்னர் அதிகளவான இந்திய இழுவைமடி படகுகள் வடக்கு கடலை ஆக்கிரமித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்றிரவு(3) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முதல் காங்கேசன்துறை வரை கடலிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை இந்திய இழுவைமடி படகுகள் வந்து வடக்கு கடற்றொழிலாளர்களின் வலைகளை வெட்டிவிட்டு செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய இழுவைமடி படகுகள்
இந்தநிலையிலே நேற்றிரவு கட்டைக்காடு கடற்பரப்பில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் இந்திய இழுவைமடி படகுகளுக்கும் இடையில் கடலில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அண்மைய நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்திற்கு பின்னர் இரண்டு நாட்களாக இந்திய இழுவைமடி படகுகள் வரவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..



பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri