பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நோக்கி இந்திய படையினர் துப்பாக்கி பிரயோகம்
இந்திய (India)- ஜம்மு காஸ்மீரின் (Jammu and Kashmir) சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக இந்திய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நேற்றிரவு (10.05.2024) இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் (Pakistan) பக்கத்தில் இருந்து இந்த ஆளில்லா விமானம் வருவதைக் கண்ட இந்திய படையினர் தொடர்ச்சியாக அதனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை
இதனையடுத்து, குறித்த ஆளில்லா விமானம் மீண்டும் பாகிஸ்தான் பக்கம் திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த ஆளில்லா விமானத்தில் இருந்து ஏதேனும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் நிலத்தை நோக்கி வீசப்பட்டதா என்பதை கண்டறிய நாராயண்பூர் என்ற பிரதேசத்தில் தேடுதல்கள் நடத்தப்படுவதாக இந்திய படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான ஆளில்லா விமானங்கள் மூலமே பாகிஸ்தான் பக்கத்தில் இருந்து இந்திய பக்கத்துக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் முன்னர் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
