போர் பதற்ற சூழலிலும் உக்ரைன் புறப்படும் இந்திய விமானம்
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா சார்பில் மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
200 இருக்கைகளைக் கொண்ட இந்த முதல் விமானம் இன்று நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் அடுத்தடுத்த விமானங்களை ஏர் இந்தியா அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.