விபத்துக்குள்ளான இந்திய கடற்படை உலங்கு வானூர்தி: சம்பவ இடத்திலேயே விமானி பலி
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஓடுபாதையிலேயே விழுந்து நொருங்கியதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று (04.11.2023) கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படைத்தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ' சீட்டாக்' என்ற உலங்கு வானூர்தி வழக்கமான ரோந்துப் பணிக்காக பறப்பில் ஈடுபடுவதற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட வேளை, சில நொடிகளிலேயே மீண்டும் ஓடு பாதையில் வேகமாக விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியதால் விமானி உயிரிழந்ததாகவும், மாலுமி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த மாலுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகின்றனர்.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
