மகிந்தவை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தங்காலை கார்ல்ட்டனில் அமைந்துள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(24.09.2025) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகரின் மனைவி தனுஜா ஜாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டதாக மகிந்த தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
இராஜதந்திர உறவு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள மகிந்த,

“சிங்கள பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட மதிய உணவை அனுபவித்த குழுவுக்கு தமது நட்பை நான் அன்புடன் நினைவு கூருகிறேன்.
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு இராஜதந்திர உறவுகளுக்கு அப்பாற்பட்டது.
இது வரலாற்று, மத, கலாச்சார, பொருளாதார மற்றும் பாதுகாப்பு போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தற்போதைய இந்திய உயர் ஸ்தானிகரின் அன்பும் வரலாற்று அறிவும் வரலாற்று உறவுகளின் அடிப்படையில் நமது இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு ஒரு தனித்துவமான பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
நிகழ்காலத்தின் தேவை
வரலாற்று நட்பின் அடிப்படையில், நிகழ்காலத்தின் தேவைகளை அங்கீகரித்து எதிர்காலத்தில் வலுவான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் நீங்கள் அளித்த பங்களிப்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

தனுஜா ஜாவையும் நான் மரியாதையுடன் நினைவு கூருகிறேன்” என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri