இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் விளக்கமறியலில்
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக சட்டநடவடிக்கை
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களிடம் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மேலதிக சட்டநடவடிக்கைகாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைகளத்தினர் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.