இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை: அன்னராசா விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை கடற்பரப்பிற்குள்ளே அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை இந்திய கடற்றொழிலாளர்கள் நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எமது நாட்டு வளத்தை அழித்து விட்டு தமிழகத்திலே இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடாத்துவது முறையற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றை நடாத்தி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
அத்தோடு, இழுவை மடிப்படகுகளுடன் எமது நாட்டிற்குள் வந்து சூழலை மாசுபடுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத கடற்றொழிலால் இலங்கையிலுள்ள சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
