தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலினிடம் இருந்து பறந்த கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரிடம், தமிழக முதல்வரின் கடிதம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சர் முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினை திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் நேரில் சென்று வழங்கினார்கள்.
கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடுமாறும் இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை ஒன்றிய அரசு விரைந்து காண வேண்டுமென்றும் தமிழக முதல்வரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri