இந்திய கடற்றொழிலாளர் அத்துமீறல்: தமிழக அரசின் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை
பாக் ஜலசந்தியில் இந்திய கடற்றொழிலாளர்களை இனந்தெரியாதவர்கள் தாக்குவதாகவும், அவர்களின் மீன்பிடி கப்பல்களை சேதப்படுத்துவதாகவும் தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு இரவும் நூற்றுக்கணக்கில் அத்துமீறல் தொழிலுக்காக வருகிறார்கள், அவர்களை இலங்கை கடற்பரப்பில் இருந்து விரட்ட தாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.
எனினும் இது சாத்தியமில்லாத போதே சிலரை கைது செய்வதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்
இதன்போது கடற்படையினர் ஒருபோதும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது பலத்தை பிரயோகிக்கவில்லை.
இந்த அத்துமீறல் உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் நாட்டின் கடல் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று கடற்படையின் பேச்சாளர் கெப்டன் கயான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
சில சந்தர்ப்பங்களில் இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறலாம் ஆனால் அது நிச்சயமாக தமது கண்காணிப்பில் இல்லை என்றும் கயான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
படகுகள் அதிகாரிகளால் பறிமுதல்
முன்னதாக பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய கடற்றொழிலாளர்கள் அடையாளம் தெரியாதவர்களால் துன்புறுத்தப்படுவதாகவும், மேலும் பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் மத்திய அரசிடம் முறையிட்டிருந்தார்.
கடந்த 28 நாட்களில் 88 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 12 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்
அத்துடன் இந்திய கடற்றொழிலாளர்கள்; மீது அடையாளம் தெரியாத குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.