எரிபொருள் நிரப்பும் நிலையத்தை பார்வையிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் (Photos)
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன் இந்தியா எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் இன்று பார்வையிட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தாவும் சென்றிருந்தார். தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பாக மனேஜ் குப்தா, ஜெய்சங்கருக்கு விளக்கியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கை வந்துள்ள ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்தார்.