இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை விஜயம்!
இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறிவதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்த விஜயத்தில் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி திட்டங்கள்
அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மதிப்பாய்வு செய்யும் வகையிலும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள இந்த விஜயம் உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிரதிநிதிகள் இலங்கையின் முக்கியஸ்தர்களுடன் பல்வேறு பேச்சு வார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
