இலங்கை வரும் இந்திய அணி! தீவிரமடையவுள்ள விளையாட்டு களம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருபதுக்கு 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு வரவுள்ளது.
ஒருநாள் போட்டிகள்
எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரும் இந்திய அணி, மூன்று இருபதுக்கு 20 ஓவர் தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடர்களில் முதலாவதாக இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டிகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 26, 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளன.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 1, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மதியம் 2:30 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
யார் அணி தலைவர்?
முதன்மை வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் ஹர்திக் பாண்டியா 'டி-20' அணிக்கு தலைவராக நியமிக்கப்படலாம்.

இதேவேளை ஒருநாள் போட்டிக்கான அணிக்கு லோகேஷ் ராகுல் தலைவராக அறிவிக்கப்படலாம்.
மேலும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கெளதம் கம்பீருக்கு இத்தொடர் முதல் சவாலாக அமையும் என கூறப்படுகின்றது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri