ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த இந்திய விமானப்படை தளபதி
இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்றைய தினம் (03.05.2023) இடம்பெற்றுள்ளது.
இந்திய விமானப்படைத் தளபதி தனது விஜயத்தின் போது, இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளையும் சந்தித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்
இதேவேளை, இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரியிலும், இந்திய விமானப்படைத் தளபதி உரை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரனவின் அழைப்பின் பேரில், சௌதரி தற்போது 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள தொழில்முறை உறவுகள் மற்றும்
பரஸ்பர ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேம்படுத்தும் என்று இலங்கை பாதுகாப்பு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.






Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
