இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் - அமைச்சர் சரத் வீரசேகர
இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.அவர்கள் இப்போது அமைதியாக இருந்தாலும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது எமக்குச் சாதகமாகவே முடிவு எடுப்பார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி பல தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்போது தமிழகத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அவர்களின் உள்ளக அரசியல் நகர்வுகள் காணப்படும்.
யார் வலியுறுத்தினாலும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்கமாட்டோம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும் கூட சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்த அறிக்கை பொய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
இந்த அறிக்கையை நாம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.பிரேரணையை நாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த பின்னரும் எமக்கு ஆதரவாகப் பல நாடுகள் குரல் கொடுத்துள்ளன. பிரதான நாடுகள் எமது பக்கம் உள்ளன என்பது எமக்குத் தைரியமளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri