வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய உதவி (Photos)
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய அரசாங்கம் முதற் கட்டமாக பெருமளவான மண்ணெண்ணெய்யை வழங்கியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்துள்ள மண்ணெண்ணெய்யை இறக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசாங்கத்தின் உதவி
இந்திய அரசாங்கம் சுமார் 15,000 லீற்றர் மண்ணெண்ணெய்யை உதவியாக வழங்கியுள்ளன.
வடக்கு கடற்தொழிலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இந்திய அரசின் இவ் உதவி திட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது,
திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத்தமிழர்கள் 6பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி (PHOTOS) |