திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்மானம்: இந்திய அரசு முன்மொழிவு
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மானிப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அந்த விஜயத்தின் போது இது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.