பாதுகாப்பு தொடர்பில் இலங்கை - இந்தியா பேச்சுவார்த்தை
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
சந்திப்பை அடுத்து இரண்டு தரப்பினரும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இரண்டு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.