இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை! - செய்திகளின் தொகுப்பு (Video)
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நிராகரித்து, சமஷ்டிக்கு குறைவான எந்தவொரு தீர்வையும் கருத்தில் எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,