இந்தியாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ள விடயம்

Tamil National People's Front Ranil Wickremesinghe Narendra Modi India Law and Order
By Sivaa Mayuri Jul 19, 2023 08:46 AM GMT
Report

சர்வதேச ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்தி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்தகால இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி வீ.ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதியன்று டெல்லியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசுவதற்கு முன்னதாக, இந்த விடயங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.

சர்வதேச ஆதரவுடன் வாக்கெடுப்பு

இந்த நிலையில் ஈழத் தமிழர்களிடையே சர்வதேச ஆதரவுடன் இந்தியா வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அவரை கடிதம் மூலம் ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும் போலித்தனத்தையும் பயன்படுத்துவதாக ருத்ரகுமாரன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ள விடயம் | India Should Take The Tamil National Issue

இந்தநிலையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் வெற்றிகரமான நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம் என்று ருத்திரகுமாரன், மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

எனவே 13வது திருத்தக் கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

1983 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட, ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுவதை ருத்திரகுமாரன் நினைவுப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம்

இந்தியாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ள விடயம் | India Should Take The Tamil National Issue

சுதந்திர அரசிற்கு அமைதியான முறையில் குரல் கொடுப்பதைக் கூட தடைசெய்யும் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின் காரணமாக, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்பதையும் ருத்திரகுமாரனின் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. எனினும் இதனை பன்மைத்துவத்தின் ஆரோக்கியமான அடையாளமாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கம் கருதுகிறது. எனவே இறுதி முடிவெடுப்பவர்கள் ஈழத் தமிழ் மக்களே என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசத்தின் இறையாண்மை ஒவ்வொரு தமிழனிடமும் உள்ளது.

எனவே, இந்தப் பன்மைத்துவத்தைப் போற்றும் வகையில், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான சரியான தீர்மானம் ஈழத் தமிழர்களிடையே இந்தியாவால் சர்வதேச ஆதரவுடன் நடத்தப்படும் வாக்கெடுப்பு மாத்திரமே என்று தாம் நம்புவதாக நாடு கடந்த தமிழீழு அரசாங்கம் நம்புகிறது. இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே என்பதை வெளிப்படையாக்கும். 

திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை

இந்தியாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ள விடயம் | India Should Take The Tamil National Issue

இது 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துக்களில் உள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கைத் தலைவர்கள் பலர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், 13வது திருத்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் அடிப்படையில் இலங்கையின் மகாவம்ச சிந்தனையுடன் இணைந்து, 13வது திருத்தத்தை சிங்கள அரசியல் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர்களின் சம்மதம் தேவையில்லை.

வரலாற்றின் இந்த மறுநிகழ்வு குறித்து, அல்பர்ட் என்ஸ்டீனை மேற்கோள் காட்டியுள்ள ருத்திரகுமாரன், பைத்தியம் என்ற வரையறை வேறு முடிவை எதிர்பார்த்து ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா தனது செல்வாக்கு மண்டலத்தில் இலங்கையை தக்கவைக்க தொடர்ந்து சலுகைகளை அளித்து வருவதை ருத்திரகுமாரனின் கடிதம் மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தியாவின் அரசியல் செல்வாக்கு

இந்தியாவிற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ள விடயம் | India Should Take The Tamil National Issue

1954 நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 சிறிமா-காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் விளைவாக 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர், உகண்டாவிலிருந்து  இடி அமீன் ஆசியர்களை வெளியேற்றியது போன்றது. இலங்கையில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு காரணமான தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு சிறீமா-இந்திரா கடல் எல்லை ஒப்பந்தத்தின் விளைவாக, ராமநாட்டு ராஜாவின் ஜமீன்தாரியின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை விட்டுக்கொடுத்து, தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய மீனவர்களின் பாரம்பரிய உணவு உரிமைகளை இலங்கைக்கு தியாகம் செய்தது என்ற இரண்டு விடயங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைகளாக ருத்திரகுமாரன் கோடிட்டுள்ளார் .

இந்தநிலையில் சிங்களக் குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்புக் குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது மற்றும் ஆபத்தானது என அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் போது, தீவின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 1.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இன்று கிழக்கு மாகாணத்தில் 29 வீத சிங்களவர்கள் உள்ளனர் என்பதை ருத்திரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுதந்திரத் தமிழீழம் என்பது இந்தியாவின் நலனில் உள்ளதாக தமது கடிதத்தில் நாடு கடந்த தமழீழ அரசாங்கத்தின் பிரதானி ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US