மோடியின் அழைப்பை நிராகரித்த ஈழத்தமிழ் தலைவர்கள்
வெடுக்குநாறிமலை விடயத்தில் இந்தியா பாராமுமமாக செயற்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை விடயம் தொடர்பில் இந்தியா அமைதிக்காத்துள்ளமை, தமிழ் இன அழிப்பிற்கு துணைபோயுள்ளதாக கருதப்படலாம் எனவும், நிச்சயமாக இந்திய அரசின் அறிக்கை வெளியாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வெடுக்குநாறிமலையை கையகப்படுத்தும் நடவடிக்கையில் பௌத்த தேரர்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் வடிவமே இந்துக்கள் மீதான அடாவடித்தனம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam