வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ள இந்திய கெப் ரக வாகனங்கள்
நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
80 கெப் ரக வாகனங்கள்
இந்த திட்டத்தின்கீழ், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு குறைந்தது 80 கெப் ரக வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் வழங்கப்படவுள்ளன.

இது பொதுமக்களின்; பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் தொடர்பான இலங்கை பொலிஸின் முக்கிய தேவையை நிவர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam