வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ள இந்திய கெப் ரக வாகனங்கள்
நாட்டின் பொலிஸ் நிலையங்களுக்கு கெப் ரக வாகனங்களை வழங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
80 கெப் ரக வாகனங்கள்
இந்த திட்டத்தின்கீழ், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு குறைந்தது 80 கெப் ரக வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் வழங்கப்படவுள்ளன.
இது பொதுமக்களின்; பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் தொடர்பான இலங்கை பொலிஸின் முக்கிய தேவையை நிவர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
