இந்தியா - பாகிஸ்தான் மோதல்! அமெரிக்காவின் ஆதரவை புறக்கணித்த மோடி
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை டெல்லி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தபோதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று இரு தலைவர்களுக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பின் போது, இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை மோடி ட்ரம்பிடம் "வலுவாக" தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விவரித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை
இந்தியாவின் அறிக்கை குறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மோதலின் போது, "இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து அல்லது அமெரிக்காவால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை" என்று மோடி ட்ரம்பிடம் "தெளிவாக" கூறியதாகவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
எனினும், மே மாதம் அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே நான்கு நாள் மோதல் ஏற்பட்டதிலிருந்து, "காஷ்மீர் பிரச்சினையை" தீர்க்க இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ட்ரம்ப் பலமுறை முன்வந்துள்ளார்.
இதற்கமைய அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், அவர்களை உடன்பட வைக்க வர்த்தகத்தை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தியதாகவும் ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்கா கூறும் கூற்றுக்களை பாகிஸ்தான் ஆதரித்தது. ஆனால் இந்தியா அதை மறுத்துள்ளது.
இந்நிலையில் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே நிறுவப்பட்ட தற்போதைய வழிகளின் கீழ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடியாக நடத்தப்பட்டன என்றும் மிஸ்ரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
