இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
பாகிஸ்தானும் இந்தியாவும், 2025 மே 18 வரை தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இணங்கியதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் டார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டார், இரண்டு நாடுகளின் இராணுவத்தினரும் முன்னதாகவே தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்தை நீடிக்கும் முடிவை எட்டியதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் உரையாடலைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் முதலில் மே 10 முதல் மே 12 வரை நீடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. பின்னர் அது மே 14 வரை நீடிக்கப்பட்டது, இப்போது மே 18 வரை நீடிக்கப்பட்டது என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொடர்
போர் நிறுத்தத்தை பராமரிப்பதில் இதுவரை இராணுவ அளவிலான தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தநிலையில் மே 18 க்குப் பின்னர், விரிவான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்று டார் கூறியுள்ளார்.
இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில் அமைந்துள்ள பஹல்காமில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7 ஆம் திகதி அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்திய போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்தன.
இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான சண்டையைத் தொடர்ந்து, மே 10 அன்று இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |