இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம்! அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க தேசிய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
இதன்படி தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.