ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video)

Sri Lanka Sri Lankan Peoples India
By Bavan Apr 19, 2023 06:45 AM GMT
Report

இந்திய வல்லரசு,  தமிழர்கள் மீது கொடுமைகளை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், மிகப்பெரும் தவறுகளை செய்தமைக்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அன்னை பூபதியம்மாவின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் (18.04.2023) யாழில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


சுடர்விட்டு எரிந்த விடுதலை

மேலும் அவர் கூறியதாவது,  உலகத்துக்கே அகிம்சையைப் போதித்துக் கொண்டதாக இருக்கின்ற இந்திய வல்லாதிக்கம் 56 வயதுடைய தாய் வல்லரசிடம் இந்திய அமைதிப்படை படுகொலையை நிறுத்தவேண்டும் என நீதிகேட்டு 31 தினங்கள் உணவு உட்கொள்ளாது நோன்பு இருந்தார்.

அப்போது அவருடைய கோரிக்கையைப் புதுடெல்லி பார்த்துக் கொண்டிருந்தது அதனால் அன்னையின் உயிரை நாங்கள் இழக்கவேண்டி இருந்தது.

இவ்வாறு எமது தமிழ் மக்களுக்காக இழந்த தாயை நினைவு கூர்வது வெறுமனவே இறந்துபோன ஒருவருக்குக் கற்பூரத்தை வைத்து கொழுத்திவிட்டு சென்று விடுவதற்காக அல்ல மாறாகப் போராட்டம் ஆரம்பித்தபோது அவரிடம் இருந்து சுடர்விட்டு எரிந்த விடுதலை உணர்வினை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்து முன்னெடுக்கின்றோம். 

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

தனிநாடு உருவாக்கி தருவோம்

ஆனால், வெறுமனவே விளக்கேற்றி மௌனமாகச் செல்லவேண்டும் என இந்திய எடுபிடிகள் கூவிக்கொண்டு வருகின்றனர். அதற்கான காரணம் இந்தியா செய்த வரலாற்றுத் துரோகத்தையும் இலங்கை அரசு செய்த வரலாற்றுத் துரோகத்தையும் கொடுமைகளையும் மறைப்பதற்காக அவ்வாறான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது.

அதேபோல, கடந்த காலத்தில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலில் அவ்வாறே முன்னெடுக்கப்பட்டது ஏனென்றால் திலீபனை சாவடிப்பதில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியக்கூடாது அது மறைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. எனவே, உண்மையில் இந்த நினைவேந்தல் ஊடாக இளம் தலைமுறைக்கு இந்த வரலாற்றுப் பணியைக் கொண்டு செல்கின்றோம்.

இந்திய வல்லரசு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கி தருவோம் என்று கூறினர்.

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

13ஆவது திருத்தச் சட்டம்

ஆனால், இந்திய அரசு எமது மண்ணுக்கு வந்து உரிமைகளை பெற்று தராதது மட்டுமல்ல எங்கள் மீது கொடுமைகளை அரங்கேற்றியிருக்கின்றது.

அன்னை பூபதியம்மா உயிர்நீத்து 35ஆவது வருடங்கள் சென்றும் இன்று கூட இந்திய அரசு தமிழ் மக்களுக்கு ஒடுக்குமுறையாக இருக்கின்ற ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவேண்டும் எனத் தமிழ் மக்களின் தலைமைகளைக் கொன்றே பேசவைக்கின்ற ஒரு துயரமான நிலமை இருந்து கொண்டிருக்கின்றது இந்த உண்மைகளை எங்கள் மக்களும் இளம் சமூகமும் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

பயணம் தொடரும்

இந்தியா தமிழர்கள் மீது 13 முயற்சிக்கின்ற விடயங்களை கைவிட வேண்டும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஒற்றையாட்சி முறையை ஒழிப்பதற்கும் தமிழ்த் தேசம் சுயநிர்ணய உரிமையை அங்கீகாரம் செய்வதற்கான ஒரு சமஷ்டி முறைமையைக் கொண்டுவர இலங்கை மீது இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்.

எனவே, நாங்கள் ஒரு தமிழ் இனமாக இந்த தாய் மீது சத்தியம் செய்கின்றோம் அந்த தாய் எந்த இலட்சியத்துக்காகப் போராடினாரே அந்த இலட்சியத்தை அடைகின்ற வரைக்கும் எங்களுடைய பயணம் தொடரும், ஒரு போதும் இந்த இலட்சியத்தைக் கைவிடமாட்டோம், ஒரு போதும் ஒற்றையாட்சிக்குள் எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எனவே இந்த இலட்சியத்துக்காகத் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்த இந்திய அரசு: கஜேந்திரன் எம்.பி (Video) | India Must Atone

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US