இலங்கையில் சீனா முன்னெடுத்துள்ள பிரம்மாண்ட திட்டம்! உன்னிப்பாக கண்காணிக்கும் இந்தியா
இலங்கையில் சீனா முன்னெடுத்துள்ள கொழும்பு துறைமுக பொருளாதார நகர திட்டம் குறித்து மிகவும் உன்னிப்பான அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக பொருளாதார நகர திட்டம் குறித்து நன்கு அறிந்த ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக பொருளாதார நகர திட்டம் தொடர்பில் அண்மையில் இலங்கை நாடாளுமன்றில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 148 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எவ்வாறாயினும், குறித்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக இலங்கையில் ஒரு சீன காலனியை உருவாக்க வழிவகுக்கும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் “நாங்கள் முறையாக எழுப்பியுள்ளோம் என்று நான் நினைக்கவில்லை.” எனினும், இந்த விடயத்தில் எங்கள் கவலைகள் தெளிவாக” இருக்கின்றது என அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் சீனாவின் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சீனாவை ஒரு மூலோபாய போட்டியாளராக கருதுகிறது. “எங்களுக்கு சில வரையறைகள் உள்ளன - அது வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இலங்கையர்கள் எழுப்பியுள்ள கவலைகள் இலங்கை ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்படுகின்றன என்றும், வேறு பிரச்சினைகள் இருந்தால், அது திறந்த நிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி பொறுப்பு ஆகிய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த திட்டங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
அதேநேரம் நம் நாட்டிற்கு மிக அருகில் நிகழும் எந்தவொரு வளர்ச்சியும் எம்மை எந்த வகையிலும் பாதிக்கின்றதா என்பது குறித்து மிக உன்னிப்பாகக் கண்காணிப்போம்.
“இது வணிக ரீதியான முயற்சியாக இருந்தால், நாங்கள் சொல்வதற்கு அதிகம் இல்லை, அது அவர்களின் விருப்பம். ஆனால் வேறு கூறுகள் இருந்தால் நிச்சயமாக அதைப் பார்ப்போம்” என அவர் மேலும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You My Like This Video