இலங்கையில் காலூன்ற இந்தியா விடுதலை புலிகளை அழித்தமை மடமைத்தனம் - என்.வீ.சுப்பிரமணியம்
நான் ஒரு இலங்கை வாழ் தமிழன் என்ற வகையில் அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டிய புத்திமதி அல்லது கோரிக்கை என்னவென்றால், அரசாங்கம் அவர்களாக வலுக்கட்டாயமாக பிடித்து வந்த பிசாசுகளிடமிருந்து தாங்கள் எப்படி வெளிவரலாம், அந்தப் பிசாசுகளை எவ்வாறு விரட்டலாம் என்று கண்டுபிடிக்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வீ.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தது இந்தியா. ரஷ்யா போன்ற நாடுகளுடைய சொல்லைக் கேட்டு, ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் விரித்த வலையிலே ராஜீவ்காந்தி விழ்ந்ததனால் வந்த விளைவு தான் இப்பொழுது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை.
இந்தியா ஆரம்பகாலத்தில் இலங்கையில் காலூன்றுவதற்காக, தமிழர்கள் சிறிய அளவு சனத்தொகை என நினைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தார்கள். தமிழீழ விடுதலை புலிகளை அழித்தது தான் அவர்கள் செய்த மடமைத்தனம்.
தற்சமயம் இந்தியா இலங்கையில் ஒரு விரல் நுனியைக் கூட பதிக்க வேண்டும் என்றால் தமிழர்களது ஆதரவு இல்லாமல் அதனைச் செய்ய முடியாது. தமிழர்களது ஆதரவு வேண்டுமாக இருந்தால் குறிப்பாக நாடு கடந்த தமிழ் ஈழத்தின் ஆதரவினைத் திரட்ட வேண்டும்.
அல்லது இங்கு மௌனித்திருக்கின்ற போராட்டங்களைத் தூசி தட்டி புதுப்பித்து மறைமுகமாக இலங்கையில் கால் பதிக்க முயற்சிக்க வேண்டும். இவை அசுர வேகத்திலே நடக்கும் பொழுது உலக நாடுகள் இலங்கை, இந்தியாவின் நடவடிக்கைகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்.
இதனைச் சீனாவும் விட்டுவிடாது, இந்தியாவும் விடாது, இரண்டு நாடுகளுக்குள்ளும் போர் மூண்டு பின்னர் இது ஒரு உலகப்போராக மாறக்கூடிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடல்வளத்துறை அமைச்சர் எங்களிடம் எந்தவிதமான ஆலோசனைகளும் கேட்பதில்லை . எல்லாம் எனக்கு தெரியும். நான் இதில் அனுபவம் மிக்கவர்" என்று ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் காரணமாக அவர் எங்களிடம் அபிப்பிராயம் கேட்பதுமில்லை, எங்களுடைய அபிப்பிராயத்தை செவிமடுப்பதுமில்லை. நான் அந்த பேருந்துகளைப் பார்வையிட்டேன், அது கோது போல உள்ளதுடன் கீழ்ப்பகுதி பாரமற்றும் காணப்படுகிறது.
கடலில் இறக்கப்பட்ட அந்தப் பேருந்துகள் நிலையாக இருக்குமாக இருந்தால், அதன் பயன் குறுகிய காலத்தில் எங்களுக்கு கிடைக்கும். ஆனால் அது காற்றினாலேயோ அல்லது வேறு காரணங்களினாலேயோ நகருமாக இருந்தால் அதனைப் போட்டதில் எந்தவிதமான பிரயோசனமுமில்லை.
இந்தியாவில் மல்லி பட்டினத்துக்கு நேரே செயற்கை கடலினை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆழிக் கடலிலே இருந்து கப்பல் மூலம் பாரிய பாறைகளைக் கொண்டுவந்து அங்கே போட்டு செயற்கையாக மீன் வாழும் இடங்களை உருவாக்குகின்றார்கள். அது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
ஏனென்றால் அந்த
பாறைகள் அரங்காது இருந்து மீன்கள் அதில் வளரும்.
பேருந்துகளை கடலில் இறக்கும் நடவடிக்கையினால் முழுமையான பயனை அடைய முடியுமா
என்பதனை, சூறாவளிகளும், சுழல் காற்றுகளும் வருவதனை வைத்து தான் கணிப்பிட
முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.