இலங்கையை தம்வசப்படுத்துவதில் சீனாவை தோற்கடித்த இந்தியா
இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பிராந்திய நாடுகளான இந்தியாவும், சீனாவும் கடும் போட்டி போட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதன் மூலம் தமது ஆதிக்கத்தை இங்கு நிலைநாட்ட திட்டமிட்டுள்ளன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இரு நாடுகளும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.
பிராந்திய நாடுகளின் போட்டி
அதற்கமைய இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்தியா 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா 67.9 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளன.
முதல் நான்கு மாதங்களில் 359.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு கடன் வழங்குநர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா வழங்கிய உதவி
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் வரையிலான இந்தியக் கடன்களின் முழு தொகை 3.5 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது இதற்கு மத்தியில் சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர்கள் கடன் தொடர்பில் இலங்கை நம்பிக்கையுடன் இருக்கிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், மார்ச் மாதத்தில் முற்றிலுமாக சரிவை எட்டியபோதும், சீனாவை முந்திக் கொண்டு இந்தியா, இலங்கைக்கு கடனை வழங்கியது.
முன்னி்லை வகிக்கும் இந்தியா
ஏப்ரல் 30 வரையிலான நான்கு மாதங்களில் நிதி வழங்கல் குறித்த தரவுகளின் அடிப்படையில் சீனாவால் நீடிக்கப்பட்ட 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 376.9 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்களை நீடித்து இந்தியா முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 19 நிமிடங்கள் முன்

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam
