இந்தியா வழங்கும் 55 மில்லியன் டொலர் கடனுதவி
இந்தியாவின் எக்ஸிம் வங்கியில் டொலர்களை கடனாக பெறும் உடன்படிக்கையில் நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று கைசாத்திட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் எக்ஸிம் வங்கியின் முகாமையாளர் நிர்மித் நரேந்திரவேதி கையெழுத்திட்டுள்ளார்.
சிறுபோக பயிர் செய்கைக்காக உடனடியாக தேவைப்படும் 65 ஆயிரம் மெற்றி தொன் யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசு, இந்திய அரசிடம் கடன் வசதியை கோரி இருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கியது.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, அமை்சசர் மகிந்த அமரவீர உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நாடு அத்தியவசிய உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri