இந்தியா வழங்கும் 55 மில்லியன் டொலர் கடனுதவி
இந்தியாவின் எக்ஸிம் வங்கியில் டொலர்களை கடனாக பெறும் உடன்படிக்கையில் நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று கைசாத்திட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் எக்ஸிம் வங்கியின் முகாமையாளர் நிர்மித் நரேந்திரவேதி கையெழுத்திட்டுள்ளார்.
சிறுபோக பயிர் செய்கைக்காக உடனடியாக தேவைப்படும் 65 ஆயிரம் மெற்றி தொன் யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசு, இந்திய அரசிடம் கடன் வசதியை கோரி இருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் யூரியா உரத்தை கொள்வனவு செய்ய இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கியது.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, அமை்சசர் மகிந்த அமரவீர உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நாடு அத்தியவசிய உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகவும் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam