இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம்
இந்தியாவின் - குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,மேகாலயா, மகாராஷ்டிராவை தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில், பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டமையினால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.