இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர்
சில மணி நேரங்களுக்கு இலங்கை வந்திருந்த இந்திய அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் உயர் மட்டக்குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் க்வத்ரா, பொருளாதார விவகார செயலாளர் அஜே சென், இந்திய அரசின் பிரதான பொருளாதா ஆலோசகர் வீ.ஏ.நாகேஸ்வரன், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன, பொருளாதார விவகார சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.சமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 26 நிமிடங்கள் முன்
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam