இந்திய உயர் மட்ட பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர்
சில மணி நேரங்களுக்கு இலங்கை வந்திருந்த இந்திய அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் உயர் மட்டக்குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் க்வத்ரா, பொருளாதார விவகார செயலாளர் அஜே சென், இந்திய அரசின் பிரதான பொருளாதா ஆலோசகர் வீ.ஏ.நாகேஸ்வரன், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன, பொருளாதார விவகார சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.சமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam