இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது! - ரணில் உறுதி
அரசியல், பொருளாதாரம் மற்றும் அண்மைய நாடு என்ற ரீதியில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை காணப்படுகிறது. ஆகவே இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்க முடியாது.
ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அனைத்து நாடுகளுடனும் நடபுறவுடன் செயற்பட வேண்டும்.
சீனா அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்யாது. இலங்கை பொருளாதாரத்தில் எதிர்பார்க்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தால் தான் சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.
தற்போதைய சூழ்நிலையில் சீனாவை தவிர பிறிதொரு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்யாது.
வெளிவிவகார கொள்கை பிற நாடுகளின் தேவைக்கேற்ப வகுக்க கூடாது. அரசாங்கம் வெளிவிவகார கொள்கையினை பிற தரப்பினருக்கு ஏற்றாட்போல் மலினப்படுத்தியுள்ளது.
சமகால அரசியல், மற்றும் பொருளாதரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமை ஊடாக இன்று இடம் பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri