சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் மீண்டும் விசாரணை

Investigation Colombo Batticaloa Journalist
By Kumar Sep 14, 2021 04:13 PM GMT
Report

மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளரும், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு முழுநேர ஊடக சங்கத்தின் தலைவருமாகிய புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இன்று (14) காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இன்று அவர் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு செய்தி தலைப்பின் அடிப்படையில் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனிடம் விசாரணை நடாத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த மாதம் என்னை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதன் பொது நான் வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தேன். அப்போது இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் பிரயோகிக்கும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊடக அமைச்சர்கள் இது குறித்து கவனத்தில் எடுக்கவேண்டும்.

என்னைத் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்துவதால் நான் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறியிருந்தேன். குறித்த எனது கருத்தின் அடிப்படையில் இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிலோன் நியூஸ் நிறுவனம் செய்தி பிரசுரித்திருந்தது அந்த செய்தியின் அடிப்படையில் இன்று என்னிடம் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

கடந்த சில மாதங்களாக ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான இவ்வாறான விசாரணைகள் நடைபெற்று வருகிறது அதுவும் என்னை பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் என்னை கைது செய்வதற்காகவே இவ்வாறான விசாரணைகள் நடைபெறுகிறது என்ற அச்சம் காரணமாக நான் கைது செய்யப்படலாம் என்ற கருத்தைக் கடந்த விசாரணையின் போது கூறியிருந்தேன்.

அதன் அடிப்படையில் குறித்த செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்காக நான் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். இவ்வாறான விசாரணை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இது போன்ற விசாரணைகள் எமது கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக செயற்பாடுகளுக்கு பாரிய தடையாக உள்ளது. எனவே எது எவ்வாறாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதும் கண்காணிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

GalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US