நாட்டின் பல பகுதிகளில் சுதந்திர தின கொண்டாட்டம்
இலங்கையின் 78ஆவது சுதந்திரதினம் இன்று (02.04.2026) கொண்டாடப்பட்டு வருகிறது.
இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் தேசிய சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
கல்முனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


செய்தி - பாரூக் சிஹான்
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ம.பிரதிபன் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
செய்தி - தீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்கால சந்ததியினரின் கரங்களால் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டது.


செய்தி - சுடரோன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்றையதினம் காலை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

செய்தி - குமார்
மன்னார்
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


செய்தி - ஆஸிக்
கிண்ணியா
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று (04) மிகவும் விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரதான வைபவத்தில், கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத், பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் பின்வரும் சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன:


செய்தி - கியாஸ் ஷாபி