அதிகரிக்கும் சிக்கல்! நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் இளைஞர்கள் (VIDEO)
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமைகள் மைய இயக்குனரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென்பதில் வெளிநாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அந்த ஆர்வம் இல்லை.
இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு வடக்கு,கிழக்கு தமிழ் இளைஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
எனவே இந்த அரசாங்கத்தின் போக்கு சிங்கள இனவாதத்தின் போக்கில் அவ்வாறு நாம் செயற்பட்டு நமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri