குழந்தைகள் மத்தியில் வைரஸ் பரவல் அதிகரிப்பு
குழந்தைகள் மத்தியில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மை நோய் பாதிப்பு
மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே குழந்தைகளை இந்த தொற்றுகளில் இருந்து பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |