கிளிநொச்சியில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள் : சுகாதார தரப்பு பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொதுமக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் (24) மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், நேற்றைய தினம் (25) 40 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.
தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் சமூகத்தில் இதனை விட அதிகளவான தொற்றாளர்கள் காணப்படலாம். எனவே பொது மக்கள் கண்டிப்பாகச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எவ்வித கோவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது நடந்துகொள்வதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் தொற்று அதிகளவில் வேகமாகப் பரவி வருவதனால் பொதுமக்கள்
விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு மாவட்ட சுகாதார தரப்பு பொதுமக்களைக்
கேட்டுள்ளனர்.



