கோறளைப்பற்று மத்தியில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பயணத்தடையினை மீறி வீதியால் பயணம் செய்யும் நபர்களுக்கும், கோவிட் தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை எழுபத்தினான்கு (74) பேருக்கு எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று (15.06.2021) வெளியானதில் இருபத்தி இரண்டு (22) பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நிலையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் நாற்பத்தொன்பது (49) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் ஐம்பது (50) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேலெழுவாரியாக நடைபெற்றுள்ளன.
இதில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட பதினோரு (11) பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ்
தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால்
பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி
நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி
எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.