உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகன் கைது
திருகோணமலை-மயிலவெவ பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாய் தாக்கப்பட்டார்

இச்சம்பவத்தில் 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான எஸ். சுவர்ணலதா காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மது போதையில் வீட்டுக்கு வந்த மருமகன் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை பொல்லால் அடித்து தாக்கியதாகவும் ஏற்கனவே குடும்பத்தகராறு காரணமாக மாமியார் தனிமையாக ஒரு வீட்டில் வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் மாமியாரை தாக்கிய 33 வயதுடைய சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! |
அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri