உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகன் கைது
திருகோணமலை-மயிலவெவ பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம்பெற்றுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாய் தாக்கப்பட்டார்

இச்சம்பவத்தில் 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான எஸ். சுவர்ணலதா காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மது போதையில் வீட்டுக்கு வந்த மருமகன் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை பொல்லால் அடித்து தாக்கியதாகவும் ஏற்கனவே குடும்பத்தகராறு காரணமாக மாமியார் தனிமையாக ஒரு வீட்டில் வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் மாமியாரை தாக்கிய 33 வயதுடைய சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஞானசாரரின் செயலணி! விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்! |
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam