மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மத்திய மாகாணத்தின் கண்டி,நுவரெலியா,மாத்தளை மாவட்டங்களில் புதிதாக 161 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் அதிகாலை 6 மணி வரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டியில் ஆயிரத்து 637 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் 625 தொற்றாளர்களும், மாத்தளையில் 217 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் கண்டி நகர எல்லைக்குள் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை பிரதேசத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
