கந்தளாய் குளம்: சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கந்தளாய் குளம், நாட்டின் இரண்டாவது பெரிய குளமாக காணப்படுகிறது. இந்த நிலையில் குறித்த நீர்த்தேக்கம் தற்போது பிரபல சுற்றுலா தலமாக மாறி, அதிக எண்ணிக்கையில் பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தாலும், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலைமை அவர்களுக்கு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் பல காணப்படுகின்றன.
மின்விளக்குகள் பழுது
அந்த வகையில் மின்விளக்குகள் சில இடங்களில் பழுதடைந்துள்ளன, இதன் காரணமாக இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது.
குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளதுடன், கழிப்பறை வசதி இன்மையானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
விபத்து அபாயம்
சிறு கடைகள் இல்லாமை மற்றும் வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதிகளில் குழந்தைகள் விளையாடுவதால் விபத்து அபாயம் உள்ளமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவே பிரதேச நிர்வாகம், சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பொது கட்டமைப்புகள் அமைச்சு, இணைந்து இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
